15 மார்ச், 2009

தேவ தேவன் கவிதைகள்

உனது வீடு========-==
நீ இளைப்பாற தேர்ந்தெடுத்தமரத்தடியா,ஓயாத வேதனையில் அரற்றும் ஜீவன்ஓய்வு கொள்ள விரித்த படுக்கையா,பல்லிகளும் பாச்சான்களும் பாம்புகளும் அண்டும்பாழ்மண்டபமா,எது உன்வீடு ?இவை எல்லாமுமேவா ?
உனது வீட்டில்உனது பிணத்தை நாடியேஉன்னோடு குடியேறியதுதான்அந்தபிசாசு என நீ அறிவாயா ?
உனது வீட்டின் இருளை துடைப்பதுசூரியன் இல்லையா ?சந்திரனும் நட்சத்திர கோடிகளூம் இல்லையா ?உன் வீட்டை கடந்துசெல்லும்மேகங்களின் நிழல் உன்னை தீண்டியதில்லையா ?
நீ எப்போது உன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாய் ?சூரியன் வந்து உன் தலையை தீண்டும்போதா ?பறவைகள் குரல்கொடுக்க துவங்கும்போதா ?
புறப்பட்டுவிட்டாயாஉனது மக்களை விட்டுவிட்டா ?அவர்கள் விழிக்கும் முன்ஒருபுதிய பொக்கிஷத்துடன்வந்து சேர்ந்துவிடும் எண்ணத்துடனாஅல்லது இந்த துறவேதானாஅந்த அரிய பொக்கிஷம் ?
போய்க் கொண்டிருக்கிறாயா ?சரிஆனால்எச்சரிக்கையாக இருநீ சோர்வுறும் இடமும்வீழும் இடமுமேவீடுகள் தோன்றும் இடம்
வீடுகள் வீதிகள் நகரங்கள்நாடுகள் மற்றும் பூமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக