15 மார்ச், 2009

தேவதேவன் கவிதைகள்

: பூனை - தேவதேவன்:
பூனை- தேவதேவன்
முதல் அம்சம்அதன் மெத்தென்ற ஸ்பரிசம்குழைவு அடிவயிற்றின்பீதியூட்டும் உயிர் கதகதப்பு
இருவிழிகள் நட்சத்திரங்கள்பார்க்கும் பார்வையில்சிதறிஓடும் இருள் எலிகள்
‘நான்! நான்!”என புலிபோலநட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்உருளும் கோட்டமுள்ள சக்கரமெனபுழுப்போலஅதன் வயிறசைதல் காணலாம்
கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாதசாமர்த்திய நடை இருந்தும்‘மியாவ்’என்ற சுயப்பிரலாப குரலால்தன் இரையை தானே ஓட்டிவிடும்முட்டாள் ஜென்மம்
நூல்கண்டோடும்திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்விளையாடும் புத்திதான் எனினும்பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு
எலியை குதறுகையில்பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்நக்கி நக்கி பாலருந்துகையில்தெரியவரும் இளகிய நாக்கையும்ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்
ஞாபகப்படுத்திப்பாருங்கள்உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவேசினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?
நன்றி: தேவ தேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு: தமிழினி வெளியீடு
கூழாங்கற்கள்இந்தக் கூழாங்கற்கள் கண்டுவியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்உன்முகம் எனஎவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்
” ஐயோ இதைப் போய் ” எனஏளனம் செய்து ஏமாற்றத்துள்என்னைச் சரித்துவிட்டாய்
சொல்லொணாதஅந்த மலைவாசஸ்தலத்தின்அழகையும் ஆனந்தத்தையும்சொல்லாதோஇக்கூழாங்கற்கள் உனக்கும் ?என எண்ணினேன்
இவற்றின் அழகுமலைகளிலிருந்து குதித்துபாறைகளூடே ஓடும் அருவிகளால்இயற்றப்பட்டது
இவற்றின் யெளவனம்மலைப்பிரதேசத்தின்அத்தனைச் செல்வங்களாலும்பராமரிக்கப்பட்டது
இவற்றின் மெளனம்கானகத்தின் பாடலைஉற்றுக் கேட்பது
மலைப்பிரதேசம்தன் ஜீவன் முழுசும் கொண்டுதன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்தஒரு உன்னத சிருஷ்டி
நிறத்தில் தன் மாமிசத்தையும்பார்வைக்கு மென்மையையும்ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டிதவம் மேற் கொண்ட நோக்கமென்ன ? என்றால்தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்.
குமட்டிக்கொண்டு வருகிறதுவீதியை அசுத்தப்படுத்திவிட்டுஅந்தக் குற்றவுணர்வே இல்லாமல்ஜம்மென்று வீற்றிருக்கும் இவ்வீடுகளின்சுத்தமும் நேர்த்தியும் அழகும் படோடபமும் காண்கையில்யாருமறியா இவ்வைகறை இருளில்முதல் ஒளியாய்இவ்வீதியைப் பெருக்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன்
ஒரு கவிஞன் சொல்கிறான் அவன் வேலை பற்றி :அவன் விடியலை வரைந்து கொண்டிருக்கிறானாம்அவன் சொல்லை நாம் நம்பித்தான் ஆக வேண்டுமாம்ஏனெனில் அவன் கவிஞனாம்
வெதுவெதுப்பேறி வியர்த்து நிற்கும் அவன் உடல்ஒரு குளிர்காற்றின் அலைபட்டுச் சிரிக்கிறது,தன் ஆதர்ச மனிதனை எண்ணிஆயிரமாண்டுகளாய் மணமாகாதுகாத்திருந்த கன்னியொருத்திபாய்ந்து போய் அவனைத் தழுவிக்கொத்திக்கொண்டது போல்
1]மாற்றப்படாத வீடுநெருக்கடியுள் நெர்ந்து அனலும்காற்றுஎந்ன செய்யஇந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லைபாதிக்கப்படுபவன் நான் மட்டுமேசைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டிநகர எல்லையிலிருக்கும் என் ஸ்கூலுக்குஅதனருகே ஒரு வீடும் கட்டிமுடித்துள்ளேன்குடிவர மறுக்கின்றனர் என் வீட்டார்ரிக்ஷா செலவே சம்பளத்தில்பாதியாகிவிடும்என பயமுறுத்துகிறாள் என் மனைவிஉண்மையும்தான் இதற்காகவேதான்கல்யாணமான உடனே நச்சரித்தேன் சைக்கிள் ஓட்டப்படி என்று.
அவளுக்கு அவள் ஸ்கூள் பக்கம் ஊருக்குள்ளேயேஅப்பாவுக்கு ஆபீஸ் பக்கம்[வயதான காலத்தில் பஸ் ஏறி இறங்க வேண்டியதில்லை ]அம்மாவுக்கு கோயில்பக்கம் மேலும் உறவினர்கள்[வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடையவேண்டாமா ?]தம்பிதங்கைகளுக்கு அவரவர் ஸ்கூல்கள் பக்கம்எனவேதான்இந்தவீட்டை நான் இன்னும் விடமுடியவில்லைஎன்றாலும்நான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன் .
2]உதயம்
முன் நடக்கும் பெண்ணணங்கின்நீலவானக் கொண்டையின் கீழ்நிலப்பூவே மதுரக்கழுத்தாய் சரிந்த தோள்வரையாம்என் கண்கள் மட்டுமே தொடு[ம்]வானில்கைக்குழந்தைமுகம் ஒன்று சிரிக்கிறது எனக்காகஇவ்வுலகம் எனக்காக
3]தீ
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்என் பத்தினி இவள் காயப்போட்டசிவந்த சேலைபற்றிஎரிந்துகொண்டிருந்தது வேலி
4]வேலிப்பூக்கள்
வேலிப்படலைதிறந்துபோட்டுவந்துஉட்கார்ந்திருப்பேன்சுதந்திரமாய்கன்றுவந்துபன்னீர்பூமேய்கிறஅழகினைபார்த்துக் கொண்டு
நீ வருவாய்
காலியிளம் வெயிலில்கன்றாக மேயகுளித்து முடித்தஉன் ஈரச்சேலையைஎன் வேலிமீதே காயப்போட
காதல்வேலிமீறும்பூவாய் தன்னைத்தான்சிம்மாசனமேறிக் கொலுவிருக்கும்அவளுக்கும் அவனுக்கும்குறுக்கே வந்துமார்புவரை மறைக்கும்சவக்கல்வேலிக்குமேலேபூக்கும் ரோஜாத்தொட்டிகைகள் கண்டால்முட்களுடன்
5]ஆண் பெண்
ஒரே படுக்கையில்உடன் படுக்கை கொண்டுநாம் ஒருவரை ஒருவர்இழுத்து அணைத்துக் கொள்வதன்பொருள் என்ன ?
ஆண் பெண் என பிரிந்தஇரட்டைத்தன்மையை மறந்துஇணைய வேட்கும் ஆவேசம்
குழந்தைபசி விழித்து அழமுலையுடன்பெண் என நாமம் ஏற்றுஎன்னை பிரிந்து செல்லும்ஒருமுனை புரிகிறதுமற்றொரு முனையில்தனித்து விடப்பட்டஎன் பிரிவின் நோக்கமென்ன ?
சிசு பேணும் முலையவளேமீண்டும் மீண்டும் வந்துஎன்னை ஆலிங்கனிக்கும்உன்னை விலக்கிஎன்னைதனித்துத் தியானிக்கவைக்கும்உயிரிீன் நோக்கம்தனித்து தியானித்திருந்தது
6]மணமாயிற்று
தாழ்பாளிட்ட கதவு திறந்துதிரைச்சீலைமணிபர்ஸில் வந்து உட்கார்ந்துகொண்டதுமனைவியின் புகைப்படம்படிப்பறை படுக்கையறையாயிற்றுஇவனை சங்கிலியின் ஒருகண்ணியாக்கிவிடசதி நடக்கும் இடமாயிற்று அதுவிடுதலை நோக்கி வாய்திறந்த கதவுகள்படுக்கையை காவல்காக்கும்ஊமைகளாகி விட்டனஇடைமறிக்கப்பட்டோஇடை தளர்ந்தோஇடை புகுந்ததுதைந்திரிய வீழ்ச்சிவீழ்ச்சியின் கருவில்உதித்ததுஇன்னொரு முயற்சிக்கு ஓர் மனித உருவீழ்ச்சியிலும் முயற்சித்தொடரிலுமேஜீவித்துவரும் மனிதகுலம்ஆழ்ந்து உறங்குகிறது இவனருகேஅவளாக
7]சீட்டாட்டம்
இடையறாத இயக்கத்தின் மடியில்[உண்பதற்கும் கழிப்பதற்கும் மட்டுமேஇடம் பெயர்ந்தோம் ]இரவு பகலற்ற விழிப்பில்ஆறு இதயங்களுக்கிடையேஓர் உரையாடல்
அகாலத்திலிருந்து காலத்துக்குசீட்டுகளை இறக்கினோம்காலமோ விலகி எங்கள் விளையாட்டைகவனித்துக் கொண்டிருந்ததுகாபி போட்டுதந்ததுசோறு சாப்பிட அநை¢த்ததுஆக எங்கள் சீட்டுக்கள் விழுந்ததுவெறுமையின் மீது
காலாதீத பிரமிப்புடன் சீட்டுக்கள்எங்கள் சொற்களாயினஎனினும் வெல்ல வெல்ல என துடித்தனஒவ்வொருவர் கைகளுக்குமாய்அவை கழன்று விழுந்தவுடன்எனினும்என்னை வெல்லு என்றுதோற்று கலையவே துடித்தன.ஒவ்வொருவரிடமிருந்தும்அவை கழன்று விழுந்தவுடன்
அப்போது இப்போது என்றுசுட்டமுடியாத ஒருபோதுஎன்றோ புதைந்துதுயில் கொண்டிருந்த ஒரு விதைதிடேரென்று வளர்ந்துஒரு மலர் காம்பை நீட்டியதுஅங்கேசீட்டாடும் அறுவர்ஆறு இதழ்கள் உடைய ஒரு மலர்.
8]சந்திப்பு
என்னதான் ஆனாலும்நீ ஒரு சுயம்புநான் ஒரு சுயம்புஉன்போக்கில் நீஎன் போக்கில் நான்எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்இருபுள்ளிகள்
நம் சந்திப்பு அதாவதுபுரிந்துகொள்ளல் அன்பு முதலானவைஎங்கு எப்போது எவ்விதம் கிட்டும் ?
சம எடையுள்ள இரண்டுக்கும்சம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில்தன் செம்மத்திக்காய்எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் புள்ளி
9 ] குடும்பம்
சமூகம் வழங்கும் செளகரியங்களும் குரூரமுமாய்எனது தந்தை இருந்தார்மனிதன் வழங்கும் அன்பும் கருணையுமாய்எனது தாயும் இருந்தார்கள்
எனது தந்தைக்கோர் பெரும் பேர் உண்டுநியாயவான் நாட்டுக்குழைப்பவன் நல்லவன் என்றெல்லாம்எனது தாய்க்கும் பேர் உண்டுபாவம் பைத்தியக்காரி ஒன்றுமறியாதவள்
இத்தோடு இந்தப் புவி முழுக்க வினியோகிக்கபோதுமான பெருந்தன்மை எனும் சரக்குஎங்கள் வீட்டில் இருந்ததென்னவோமறுக்க முடியாத உண்மை
என் தாயிடம் நான் கண்டிருந்தேன்என் தந்தையின் மூர்க்கங்களை எல்லாம்எப்போதும் மன்ன்னித்து நிற்பதுபோன்ற ஒரு பெருந்தன்மையைஎனது தந்தையிடம் கண்டிருந்தேன்எனது தாயின் அறிவீனங்களை எல்லாம்எப்போதும் சகித்துக் கொண்டு முறுவலிப்பதுபோன்றஒரு பெருந்தன்மையை
ஒருநாள் -இல்லை திடார் திடாரென்று-தந்தை உதைத்தார் தாயின்மீது எகிறிதாய் சபித்தாள் தந்தை மீது கதறிநான் முழித்தேன் பார்வையாளனாய்
யார் நிகழ்த்துகிறார் இந்த நாடகத்தை எனநான் கேட்டேன் எனக்குள் நெளிபவனிடம்
தற்செயலாய் ஒருநாள் சந்தித்தேன்அந்த நாடக இயக்குநரைஎன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தாராம் அவர்தன் நாடகத்துக்கு இரு பாடல்களை இயற்றித் தரணுமாம்எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவுதற்கோர் டூயட் பாட்டும்அன்னவர் கீரியும் பாம்புமாயிருக்கையில்ஒலிப்பதற்கோர் பின்னணிப்பாட்டும்
‘ ‘ கவனம் இப்பாடல்களின் பொருளைஉம் நடிகர்கள் புரிந்துகொண்டால்உம் நாடகம் அம்பேல் ‘என்ற எச்சரிக்கையுடன் வழங்கினேன்எனது இரு பாடல்களை அவரிடம்.
10 ] தொடுதல்
ஒளியின் சிறகுகள் உதைத்து வெளிப்படுகையில்தெறித்து அறுகிறது தொப்புள் கொடி
தேவதைகளின்கண்களின் மின்னுகின்றனஉடலெனப்படுவதன் கன்னிமையும்உளமெனப்படுவதன் குழந்தைமையும்உயிரெனப்படுவதன் ஆனந்தமும்
அனாதியிலிருந்துஓடிவரும் குருதி துறுதுறுக்கும்விரல் தொட்டு‘அணைகிறது ஒளி ‘எனப் பதறாதேவிரல் தொடுகையில்கரியும் சிறகுகளின் வெப்பத்தில்பெறுகின்றனகன்னிமை தாய்மையைகுழந்தைமை அறிவைஆனந்தம் துக்கத்தை
பதறாதே பொறு விரலை எடுக்காதேஅந்த ஒளி உன் விரல் வழியாக புகுந்துஉன்னுள் இயற்றப்படும் வரை பொறுஅப்புறம் கைவந்துவிடும் அந்தக்கலை
பாதம் பதிக்காமல் உலவுதற்கும்கைகள் விரியாமல் அணைப்பதற்கும்விரல்களில்லாமல் தொடுவதற்கும்இதழ்பதிக்காமல் முத்தமிடுவதற்கும்சொற்களில்லாமல் பேசுவதற்கும்இல்லாமலே இருப்பதற்குமான கலை .
ஆற்றோரப் பாறைகளின்மேல்
ஆற்றோரப் பாறைகளின்மேல்அமர்ந்திருக்கும்இக் கல் மண்டபங்கள்தாம்எத்தனை அழகு!எத்தனை எளிமை!எத்தனை உறுதி!எத்தனை தூய்மை!
பூஜை வேண்டாமல்விக்ரகங்கள் வேண்டாமல்குழந்தைகள் துளைத்துகும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோஅமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்இங்கே நிரந்தரமாய்?
சுற்றுச் சுவர்களில்லாதஅதன் உள்வெளிகளில்‘உள்ளொன்றும் புறமொன்றுமி’னால்உருவாகும் துயரேதுமின்றிச்சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்கண்டு நின்றனரோ புத்தர்?
***** ***** *****
காவல் நிலையம்
விலங்கோடு விலங்காய்க்குடிகொண்டிருக்கும் வன்முறைஎங்கிருந்து வந்ததென்றுயாருக்காவது தெரியுமா?தெரியும்.
கையிலகப்பட்ட கைதிமீதுகாவலன் ஒருவனிடன்கண்மண் தெரியாமல் வெளிப்படும்வன்முறைஎங்கிருந்து வந்ததென்றுயாருக்காவது தெரியுமா?தெரியும்:பல்லாண்டுகளாய்இப் புவியெங்கும்அன்பு வழுவிஅறம்பிழைத்த காவல்தெய்வத்தின்மனச் சிதைவிலிருந்து கிளம்பியது.பார்வையற்ற விழிக்குழிகளிலிருந்துபீரிட்டுக் கொட்டும் எரிமலைக் குழம்பு.
***** ***** *****
கண்டதும் விண்டதும்
மலையுச்சியேறியவன்தான் கண்டு கொண்டதைஒரு கோயிலென வடித்துவிட்டுக்கீழிறங்கினான்.
கோயில் சென்றவன்உதட்டு பிதுக்கலுடன்கைவிரித்தபடிகீழிறங்கினான்.
கீழேஒரு புல்அய்யோ,அதுகாற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?
அங்கேதலைப்பாகையும்அரையாடையுமாய்ச்சுள்ளி விறகு சேகரித்துச்செல்லும் ஒரு மனிதனைகாதலுடன் கவலையுடனும்கண்டு கொண்டமையோ அது?
விண்டுரைக்க முடியாதமெய்மையின் சொற்கள் தாமோஇந்த மவுனப் பிரமாண்டமும்பேரியற்கையும்இந்த மனிதனும்?
***** ***** *****
தாய்வீடு
பாதுகாப்பையே தேடுபவர்கள்பாதுகாப்பை அடைவதேயில்லை.பொருளையே தேடுபவர்கள்அன்பை அடைவதேயில்லை.இன்பத்தையே விழைபவர்கள்நிறைவை அடைவதேயில்லை.ராணுவத்திற்கும் கோரிக்கைகளுக்கும்பெருஞ்செலவுபுரியும் உலகிலன்றோநாம் வாழ்கிறோம்.
நல்லாசனமிட்டபடிகையில் சீப்புடன்தன் மகள் சகுந்தலாவின்தலை ஆய்ந்துகொண்டிருக்கிறாள்அம்மா.சிக்கலில்லாத கூந்தலில்வெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.
தாங்கொணாதஒரு துயர்க் கதைக்குப் பின்தான்திடமான ஒரு முடிவுடன்பேராற்றங்கரையின்தருநிழல்மீதமர்ந்திருக்கும்தாய்வீடு திரும்பிவிட்டிருக்கிறாள் சகுந்தலா.
***** ***** *****
தீராப் பெருந் துயர்களின்
முளை எட்டிப் பார்க்கும்விஷ வித்துக்களையாகண்டு கொண்டாள் ,சாந்தா,
வேகம் பொறி பரக்கவிளையாட்டுத் திடல் அதிரஒருவரை ஒருவர்முந்தி வந்து கொண்டிருக்கும்தத்தம் பிள்ளைகளைஅணி மனிதர்களைஊக்குவித்துக்கொண்டிருக்கும்உற்சாக ஆரவாரத்திற்கு நடுவே?
“என் மனதைக் கவிதைகளில் மொழி பெயர்க்கிறேன்”-கவிஞர் தேவதேவன்சந்திப்பு: வே.சாவித்திரிநன்றி:
அம்பலம்மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா? ‘தான்’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது.
நார்சிசஸ்வனம் எனும் கவிதை நூலுக்கு இவ்வருட ‘சிற்பி இலக்கிய விருது பெற்றவர் கவிஞர் தேவதேவன். தூத்துக்குடி பள்ளி ஒன்றில் ஆசிரியர். பத்துக் கவிதை நூல்களுக்கு சொந்தக்காரர். இந்த நூற்றாண்டின் இணையற்ற சிறுகதைகள் வரிசையில் தொகுக்கப்பட்ட கதைத் தொகுப்பு நூலில் இவருடைய சிறுகதையும் உண்டு. இயற்கை அழகு சார்ந்த விஷயங்களை தத்துவார்த்த ரீதியில் நுட்பமாய் மொழி இழைகளைப் பின்னிப்பின்னி கவிமாலை தொடுத்து தமிழ் அன்னைக்கு சார்த்தும் அவருடன் ஒரு நேர்காணல்.
தங்களின் இளமைக் காலம் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்?
ரொம்பவும் வறுமையும் அறியாமையும் உள்ள குடும்பத்தில் பிறந்தேன். இயல்பிலேயே துக்கமுள்ள மனுசனாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன். இசை, நடனம், ஓவியம் ஆகியவற்றில் இளம் வயதிலிருந்தே நிறைய ஆர்வம். அதில் ஒன்றில் சிறந்தவனாக விளங்க பிறந்த சூழலும், வறுமையும் உதவவில்லை. ரொம்ப சின்னவயதில் படிக்கத் தெரியாத காலத்திலேயே அப்பா மூலமாக-நிறைய புத்தகங்கள் படிக்கப்பட்டு காது வழியே கிரஹித்து முடித்திருந்தேன். மனம் அப்போதிருந்தே ஏதோ உயர்ந்த ஒன்றை நாடி நாடி வர சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிந்தது. பனிரெண்டு வயதிலேயே நிறைய கவிதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். தனிமையும் துக்கமும் இருக்கிற காலத்தில் அதைச் சொல்ல ஒரு மீடியாவாகக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தேன். காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கானவையாக ஆயின.
‘துக்கம், துக்கம் என்கிறீர்களே அது எப்படிப்பட்டது? அது உங்களுக்கானதா? இச்சமுதாயத்திற்கானதா?
அது இனம்புரியாமல் ‘மிஸ்டிக்’ ஆகவே இருந்து வருகிறது. என் கவிதைகள் எல்லாம் அவற்றை சொல்வதற்கான முயற்சிகள். எந்த வகையில் அதைச் சொன்னாலும் அத்துக்கம் அதற்குள் அடங்காத விஷயமாகத்தான் உள்ளது. அதனால் இதுதான் இதற்குக் காரணம் என்று என்னாலேயே கற்பிதம் செய்ய முடிவதில்லை. என் கவிதைகள் எல்லாம் படித்து-வெவ்வேறு தளங்களில் என் துக்கத்தைக் கிரஹிக்கும் வாசகனால் அதைக் கண்டுபிடித்து விட முடியும்.
இசை, ஓவியம், நடனத்தில் ஆர்வம் வந்தது எப்படி?
தூத்துக்குடியில் ரொம்ப காலம் முன்பிருந்தே ‘ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப், ஃபோர்ட் ட்ரஸ்ட்’ போன்ற அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் பெரிய அளவில் இசை நடன நிகழ்ச்சிகள் நடத்தும். அப்போது பார்வையாளனாக அமர்ந்து இசை, நடனம் கற்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டு அதில் முழுமையாக ஈடுபட முயற்சி செய்தேன். முடியவில்லை. பிறகு பெயிண்டிங்ஸில் ரொம்ப ஈடுபாடு வர அதற்கும் சரியான சூழல் இடம் கொடுக்கவில்லை. பெயிண்டிங்கில் பெரிய பயிற்சி பெற்று வரைந்தாலும் வரைவதற்கு கேன்வாஸ் செய்வது, பணச்செலவு செய்து அதற்கான பொருட்கள் வாங்குவது என்பதெல்லாம் எனக்கு இயலாத காரியம். அதனாலேயே என்னுள் உள்ளூர ஊறும் விஷயத்தை கவிதையாக்கப் புறப்பட்டேன். ஒரு ‘ஒன் சைடு’ தாளில் கூட கவிதை எழுதி விட முடிந்தது பிடித்துப் போனது. ஆரம்ப காலத்தில் நான் தேர்ந்தெடுத்த கவிதைகள் எல்லாம் ‘பெயிண்டிங்’ செய்ய நினைத்த படங்களே!
உங்கள் கவிதைகளில் கலையோட்டமும், கதையோட்டமும், கூடவே அபரிமித பன்மொழிச் செறிவும் தெரிகிறது. அதற்குள் ஏதோ இனம் புரியா சமூகத் தன்மைகளை பொதித்து வைத்துள்ளதாகவும் ஒரு மாயத் தோற்றம். உங்கள் கவி வரிகளில் அப்படியென்ன உள்நோக்கு வைத்துள்ளீர்கள்?
என் வாழ்க்கை அனுபவமே கவிதைக்கு நிகரானது. என் நிமிஷங்கள் எல்லாம் கவித்துவமாக இருக்கிறது. லௌகீக அளவில் இது மிக ஆபத்தானது எனும் எண்ணம்தான் உடன் இருப்பவர்களுக்கு ஏற்படும். ஏற்படுகிறது. அதில் ரொம்பவும் உயிர்த்துடிப்போடு வாழ்கிற வாழ்க்கையும் இருக்கிறது. அதுதான் உண்மையான சந்தோஷம். அதை என் கவித்துவ வாசகர்கள் புரிந்தும் கொள்கிறார்கள். எந்தவிதமான உள்நோக்கமும் என் கவிதைகளுக்குள் இல்லையென்பதே என்னளவில் உண்மை. அதற்கு நிகராக அந்தக் கவிதைகளுக்கு நிகராக இன்னொரு பீடம் இல்லை என்பதே என் அபிப்ராயம். இங்கே நீங்கள் நீங்களாக இருப்பதை விட வேறென்ன பதவியை சுகமாய் அனுபவித்து விட முடியும்? அதைச் சொல்லுவதே என் கவிதைகள் எனலாம்.
‘நார்சிசஸ்வனம்’ உத்தியும் உருவாக்கமும் அமைந்தது எப்படி? அதைப்பற்றியதான விளக்கத்தைக் கொஞ்சம் எங்கள் வாசகர்களுக்குச் சொல்லுங்கள்?
உங்களுக்கே தெரியும் நார்சிசஸ் என்பது தன்னைத்தானே அழகு பார்த்து தான்தான் பெரிய அழகன் என்பதை நினைக்கும் அழகிய சொல் என்று. அது ஒரு மோசமான செயலாகத்தான் பல்வகை நிலைகளிலும் குறிக்கப்பட்டு வந்துள்ளது. கவிஞன் என்பவன் வாழ்க்கையை உணர்ந்தவன்தானா என ஒரு குரோதம் அங்கங்கே ஏற்பட்டும் உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்குத் தகுதியான ஒரு ‘மெட்டாஃபர்’ வாழ்க்கையிலோ, கதையிலோ, இதே கவிதையிலோ கிடைக்கிறபோது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.
நான் என் கவிதைகளில் தனிமனிதனுடைய அழகு-ஒரு மனிதன் தான் மனிதனாக இருப்பதுதான் ‘greatest beauty’-அதுதான் தனிமனிதத்துவம் என்கிறேன். அதைத் தாக்குவதற்கான கருவியாகத்தான் ‘இவர்களெல்லாம் நார்சிஸ்ட்’ என்கிற கருத்தைப் பிரயோகிக்கிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் இந்தக் கருத்துத் தவறானது. ஏனென்றால் தனிமனிதன் என்ற அளவில் நான் உயர்ந்திருக்கிறேன். ‘நார்சிசஸ்’ எனும் பிரயோகம் இங்கே தவறாகப் பயன்படுவதாக குறைபாடாகத் தெரிந்தது. இதனால் தனிமனிதன் என்பவன் சமூகத்திற்கு எதிரானவன் என்கிற ‘concept’ உருவாகியிருக்கும். இதுவும் தவறானது. தனக்குத் தானே அன்பும், பண்பும், மதிப்பும், மரியாதையும் உள்ளவன்தான் சமூகத்தில் சிறந்த மனிதனாகவும் இருப்பான்; மற்றவரையும் மதித்து நடப்பான். ‘man’ என்பது ஒரு உயர்ந்த ‘ஃபினாமினா.’ எல்லாவற்றுக்கும் அதில்தான் மருந்தும், மருத்துவமும் உள்ளது என்பது என் கருத்து.
அப்போதுதான் ‘நார்சிசஸ்வனம்’ க்ரீக் மித்தாலஜியில் ஒரு புத்தகம் படித்து வந்தபோது அதில் வந்த ‘நார்சிசஸ்’ பற்றின கதை எனக்குள் ஒரு தாக்கத்தை மூட்டியது. நான் நினைத்து சொல்ல வேண்டிய விஷயமெல்லாம் அக்கதை மூலமாகச் சொல்லலாம் எனத் தோன்றியது. அக்கதை இக்கவிதைக்கு ஒரு ‘இன்ட்ரபிரடேஷன்.’ அது வேறு; என் கவிதை வேறு!
அப்படியென்றால் கவிஞன் என்பவன் தன்னைத்தான் அழகு பார்த்துக் கொள்பவன் என்கிற கருத்தையே நீங்களும் வலியுறுத்தினது போல்தானே உள்ளது?
அப்படி இல்லை என்பதுதான் என் நார்சிசஸ். தான் என்பது மனிதன். மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா? ‘தான்’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது. அப்போது உங்களுக்குள் இருப்பதும் நான்தான் என்றாகிறது. ‘நார்சிசஸ்’ என்பது புற அழகு சார்ந்த விஷயமாக ‘மித்’தில் இருக்கிறது. என் கவிதையில் அவனை அக அழகு சார்ந்த உயர்ந்த மனிதனாக முடிவான மனிதன் தன்னைத் தானே உணருகிற ஆளாக ஆக்கியுள்ளேன்.
சூழல் குறித்த நிறைந்த அக்கறையுடன் மரம், காற்று, நீர்நிலைகள், பறவைகள் என இயற்கை சார்ந்த விஷயங்களுக்கே தங்கள் கவித்துவம் முக்கியத்துவம் தருகிறதே. என்ன காரணம்?
நான் பிறந்ததிலிருந்தே இயற்கை எனக்கொரு புகலிடம் தந்து வந்துள்ளது. அது சார்ந்து மனவெறுமையையும், மனவளத்தையும் குறிக்கிறார்போல்தான் கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன். மனவெறுமை, மனவறுமை சொல்லக் கூடிய விஷயமாக இருப்பதனால் மனிதனுக்குள் மனவளத்தை இயற்கை சொல்கிற மாதிரியும், இயற்கை கெடுவதனால் மனவளமும் கெடுப்பது போலவும் சொல்வது என் இயல்பாக ஆகியுள்ளது. நான் எழுதினதில் ‘அகலி’ என்றொரு காவியம். அது ‘சுற்றுச் சூழல்’ பற்றின பிரமாதமான புத்தகம் என்கிறார்கள். நான் ஏதோ சூழல் குறித்து எழுத வேண்டும் என முடிவு செய்துகொண்டு எழுதினதாகவும் சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. அதில் உள்ள விஷயம் எனக்குள் ‘எழுபதுகளிலேயே’ இருந்தவை. மனதில் குறிப்பாக எழுதினதையே பின்னாளில் விரிவாக எழுதினேன். எழுபதில் ‘ஓசோன்’ பிரச்னையே வரவில்லை. இயல்பிலேயே எனக்கு இது அமைந்துவிட்டது. எனக்கு இதில் பெருமையில்லை என்றாலும் கவலைப்படுவதில்லை. ‘ஒரு மரத்தைக் கூட காண முடியவில்லை’ என நான் எழுதுகிறேன் என்றால் ‘நிற்க நிழல் இல்லையே’ என்கிற என் ஏக்கத்தின் வெளிப்பாடு அது. அதனை வைத்தே நான் சூழலில் ஆர்வம் காட்டும் கவிஞன் என முத்திரை குத்த விளைவது பொருத்தமானதும் சரியானதும் அல்ல.
எல்லாம் சரி. எந்தக் கவிஞர்களின் கவிதைகள் உங்களை இப்படியொரு கவிஞராக உருவாக்கம் கொள்ளச் செய்தன? நீங்கள் வடிக்கும் கவி வரிகள் அடிக்கடி தாகூரையே நினைவுபடுத்துகின்றனவே?
உலகம் மெச்சுகிற கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் படித்தாக வேண்டும் என்கிற தாகம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அப்படி என்னை ஈர்த்த கவிஞர்களில் முதலாவதாய் வருபவர் தாகூர். கூடவே ஜேம்ஸ் இல்லியட். ஆங்கிலத்தில் அகடாமிக்கல் அளவில் பிரபலமாகவுள்ள ‘எல்லோரும் படித்தே ஆக வேண்டும்’ எனச் சொல்லப்படுகிற கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் படித்த பிறகுதான் நானும் ஒரு கவிஞன்தான் என்கிற உறுதி எனக்குக் கிடைத்தது. ஆனால் அவர்களே என் கவிதைகளுக்கு ஆதர்ஷ புருஷர்களல்ல. தாகூர், அல்லது மேலை நாட்டுக் கவிஞர்களின் பாதிப்பு கூட என் கவிதைகளில் இல்லை. என் மொழி தனித்துவம் மிக்கது. தாகூரோ, பெரிய விட்மேனனோ, எலியட்டோ அவர்களுக்கு வேறோர் உலகம் உண்டு. அவர்களின் சொந்த உலகத்தின் மூலமாக அவர்கள் சொல்லுகிற சாராம்சம் என்னுடன் ஒத்துப்போகும். அதனாலேயே அவர்களைப் போன்ற ‘கவிஞன்’ நானும் என உணர்கிறேன். ஆரம்பத்திலும் சரி, இப்போதும் சரி என் கவிதைகள் மரங்களின் மூலமாகப் பேசுகின்றன. யாருமே இப்படிப் பார்த்தது கிடையாது. வாழ்க்கையை வாழ்ந்து என் மொழியையும், ஆழ்ந்த அனுபவத்தையும் பதிவு செய்கிறேன். அவர்களின் பாதிப்பு எனக்கிருந்தால் அவர்களின் மொழியைத்தானே கையாண்டிருக்க முடியும்? அப்படி ஒரு பாதிப்பினால் எழுதுபவர்கள் ‘டயர்டு’ ஆகி காணாமல் போய் விடுவர். இங்கே தாகூர் சொல்லாத பல விஷயங்களை நான் செய்திருக்கிறேன். அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஏற்கனவே ஒரு ‘பெரும் தமிழ்க் கவிஞர்’ கொடுத்த பரிசைப் பெற்றுக் கொள்ளாத நீங்கள், இப்போது சிற்பி விருது மட்டும் மனமுவந்து பெறக் காரணம்?
சிற்பி அறக்கட்டளைக்கு ஒரு ‘சின்சியாரிட்டியும்’ ‘கோட்பாடும்’ உள்ளது. இதனை ஆரம்பம் முதலே உணர்ந்து வந்துள்ளேன். அப்துல் ரகுமானுக்குக் கொடுத்தார்கள். பிறகு பழமலய்க்குக் கொடுத்தார்கள். அவர்களின் கவிதைகளின் மேல் எனக்குத் தனிப்பட்ட அளவில் விமர்சனம் உண்டேயொழிய விருது கொடுத்தவர்களின் தேர்வுக் கூர்மையை நான் மதிக்கிறேன். இத்துடன் நான் முன்பே மறுதலித்த கவிப்பரிசை தயவுசெய்து இணைத்துப் பேசாதீர்கள். அதைப்பற்றிப் பேசவும் எனக்கு விருப்பமில்லை.
உங்களுக்கு கவிதைகளின் மூலம் எது நிறைவடைந்துள்ளது? நிறைவாகாதும் உள்ளது?
கவிதை என்பது உயிர்த்துடிப்புடன் வாழ்வதன் வெளிப்பாடு. அதில் நிறைவு, நிறைவில்லை என்பது பிரச்னையில்லை. இப்படித்தான் வாழமுடியும் என எடுத்துக்கொண்டால் அது நிறைவுதான். இப்படியில்லாமல் இருக்கவே இயலாது எனக் குறைப்பட்டு ஏக்கம் கொண்டால் வாழ்க்கையில் அது குறைதான்.
நன்றி:
அம்பலம்
1. jeyamohan.in » Blog Archive » தேவதேவனின் வீடு:ஜெயமோகன் எழுதிய ‘ நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்து ‘ என்ற நூலில் இருந்து.
2.
The Kavingar Devamagal literary awards - Tamil Poet Devadevan « Tamil News: “தேவமகள் இலக்கிய விருதுக்கு தேர்வான கவிஞர்கள் அறிவிப்பு”
3.
என்றால் என்ன: பிடித்த கவிதைகள்:�
சிற்பி இலக்கிய விருது விழா…
நன்றி:
அம்பலம்
“சிற்பி அறக்கட்டளை நாவலாசிரியனுக்குப் பரிசு கொடுத்துத்தான் வாழ வேண்டுமா? எத்தனை மாத நாவல்கள்? பத்திரிகைத் தொடர்கதைகள், நூலகங்கள், வார இதழ்கள் எல்லாம் அவர்களுக்கு பட்டுப்பாய் விரித்து வெண்சாமரம் வீசிக் கொழுக்க வைக்கின்றன!”
அவுட்டோர் ஷ§ட்டிங் ஸ்பாட்’ பொள்ளாச்சி, கடந்த வாரம் சனிக்கிழமை மாலை இலக்கிய நகரமாய் மாறியது. மகாத்மா காந்தி மண்டபம் நிறைய பரிச்சயமான-பரிச்சயமற்ற கலை இலக்கியத் தலைகள். கவிஞர் பழமலய்க்கும், கவிஞர் சி.மணிக்கும் கடந்த வருடங்களில் கொடுக்கப்பட்ட ‘சிற்பி’ இலக்கிய விருது இந்த ஆண்டு தேவதேவனின் ‘நார்சிசஸ்வனம்’ என்கிற கவிதைத் தொகுப்புக்கு அளிக்கப்பட்டது. ‘2000-ம் ஆண்டில் உலகு பொங்கும் கலைப்படைப்பு ஒன்று தமிழில் உருவாகும்’ என எடுத்த எடுப்பில் பேசிய சிற்பி, மேடையில் வீற்றிருந்த கவிஞர் பாலாவையும், மு.மேத்தாவையும், பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனையும் கவிச் சொற்பொழிவில் அடக்கி நகர்ந்தார். விருது பெறும் கவிஞர் தேவதேவனைப் பற்றி அவர் கூறியது:
”எனக்கு தேவதேவனின் கவிதைகளைப் பற்றி நினைக்கிறபோதெல்லாம் நான் நித்தமும் தொழுகின்ற ராமானுஜரின் நினைவுதான் வருகின்றது. ‘ஆலயப் பிரவேசத்திற்காக’ மேல் கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டு வருகிறேன் என்று சொல்லியபோது துடித்துப் போயினராம் அப்பகுதி மக்கள். அதற்காக அவர் நினைவாக அங்கே ஒரு விக்ரகம் செய்து வைத்து விட்டு வந்தார். அதே போல் தாம் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விக்ரகம். ஸ்ரீரங்கத்தில் ஒரு விக்ரகம். அவை ஒவ்வொன்றும் ‘தமர் உகந்த திருமேனி, தாம் உகந்த திருமேனி, தான் ஆன திருமேனி’ என்று பாடப் பெற்றன. தேவ தேவனுடைய கவிதைகள் ‘தான் ஆன திருமேனியனாகவே’ வளர்ந்து கிளை பரப்பி எனக்குக் காட்சி கொள்கின்றன. இயற்கையொடு அவருக்கிருக்கிற நேசமும் பிணைப்பும் அதனூடேயே ‘தானாக’ மாற்றி விடுகிறது. இயற்கையைப் பாழடிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாற்சந்தியில் விட்டு நசுக்காமல் அவர் நகர்வதேயில்லை. ‘சிறகு முளைக்கும் முன் கொல்லப்பட்ட பட்டுப் பூச்சிகள் - மாதர் தம் பட்டாடைகள்’ என்று சிறு பூச்சிக்கும் கனிந்துருகும் தானே ஆகிற படைப்புக்களைப் படைக்கிற அவருக்கு விருது கொடுப்பது இந்த விருதுக்கே அரிய பெருமை”.
தலைமையுரையாற்ற வந்த மணிவாசகர் பதிப்பகம் ச.மெய்யப்பனோ தானே விருது பெற்றதுபோல் உணர்ச்சிப் பிழம்பானார். குழந்தை மழலை உதிர்ப்பதுபோல் அவரிடமிருந்து யதார்த்த கானம். ”தேவதேவன் மனைவி அவருடன் வந்திருக்கிறார். அது அவருக்கு அசாத்யப் பாராட்டு. எனக்கு மனைவி வரவில்லை. அதுதான் சொல்றது எதற்கும் ஒரு கொடுப்பினை வேணுமய்யா! ஐயா, கவிஞர் தேவதேவனே உப்பு விளையற பூமியிலிருந்து எழுந்து ஜீவசக்தி கொடுத்திருக்கிறீர்கள். புரிந்தும் புரியாமலும் உழலும் இருண்மை உலகில் பளிச்சென்று அடிக்கும் மின்னலய்யா உங்கள் கவிதைகள். ‘இருள்… இருள்…’ என்று கத்திக் கொண்டிருப்பதில் பலனில்லை. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வை என்றாரே ஒரு பெரியவர். அதைச் செய்தவர் நீர்தானய்யா!” விருதுக் கவிஞரை அறிமுகப்படுத்த வந்த கவிஞர் பாலா நம் தமிழ்ப் பண்பாடு, இந்தியக் கலாசாரம் முழுமையையும் தம் சொற்பொழிவில் ஏற்றிக் கொண்டார்.
”கல்லும் கல்லும் இருந்தால் அங்கே வெறும் கல்தான் இருக்கும். கூடவே மனம் இருந்தால்தான் நாதம் பிறக்கும். மரம், மரத்துடன் இருந்தால் மரங்கள்தானே இருக்கும்? நாதம் அதிலிருந்து கிடைக்கக் கூடவே மனம் வேண்டும். அப்படித்தான் கவிதை என்பதும். நல்ல கவிதைகள் நல்ல மனம் இருந்தாலே நாதமாக மாறும். அப்படிப்பட்ட கவிதைகள்தான் தேவதேவனின் கவிதைகள். மேற்கு நாட்டு கலை-ஓவியம் பார்தோமென்றால் அதில் ‘பிகாஸோ’ எனும் கையெழுத்து இருக்கும். அதே போல் அங்கெல்லாம் கட்டப்பட்ட புகழ்பெற்ற கட்டிடத்திற்கும், கலைச்சிற்பங்களுக்கெல்லாம் கீழே அதனை படைத்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். இது மேற்கத்தியக் கலை. ஆனால் இங்கே மாமல்லபுரத்துக்கும், தஞ்சைப் பெரிய கோவிலுக்கும், சித்தன்ன வாசல் ஓவியங்களுக்கும் கீழே எந்தப் படைப்பாளியின் கையெழுத்து இடப்பட்டிருக்கிறது? எதுவுமே இல்லை. இதுதான் தமிழ் மரபு. இந்தியக் கலை. இது நமக்கு பெருமையளிக்கும் விஷயமும் ஆகும். இது யார் செய்தது? யார் படைத்தது? என்று கேள்வி எழும் போதெல்லாம் ‘தமிழ் செய்தது’ ‘தமிழன் படைத்தது’ என இறுமாப்புக் கொள்வோம். இதுதான் மேற்கத்தியக் கலைகளுக்கும் இந்தியக் கலைகளுக்குமான வித்தியாசம். இது ‘நான்’ என்பதற்கும் ‘நாம்’ என்பதற்குமான யுத்தம். தமிழ்க் கவிதைகளை அடையாளம் பாட்டின ‘வானம்பாடி’ இப்போது தமிழ்க் கவிஞர்களையும் அழைத்து அறிமுகப்படுத்தி கௌரவப்படுத்துவதில் கவிஞர் படையே பெருமிதம் கொள்ள வேண்டும். இங்கே மனிதர்களெல்லாம் மிருகங்களாகி வருவதைக் காண்கிறோம். ஆனால் மனிதர்களெல்லாம் தேவ தேவர்களாக மாறுவதற்கு யோசித்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார் நம் விருதுக் கவிஞர்’. பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் விருதும் கொடுக்கப்பட்டு எத்தனை புகழ்மாலை சூட்டினாலும், தன் யதார்த்த நிலையிலிருந்து துளியும் பிசகிச் சாயாது ஏற்புரை ஆற்றினார் கவிஞர் தேவதேவன்.
”இங்கே கவிஞர்களுக்கு மதிப்பே இருப்பதில்லை. நவீன தமிழ் இலக்கிய விழாக்களில் எங்களூர்ப் பக்கம் ஐம்பது பேர் வந்தாலே அதிகம். அதில் என் வாசகர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக என் கவிதை நூல்கள் பத்திருபதை விற்பனைக்கு எடுத்துப் போவேன். அதில் ஒன்றிரண்டு விற்றாலே பெரிய ஆச்சர்யம். பிரபஞ்சம் எப்படி ஓர் ஒழுங்கியலில் இயங்குகிறதோ இச்சமூகம் அப்படி மிக ஒழுங்காக வேண்டும் என்பதே என் கவிதை லயம். அது சார்ந்த அழகியலே என் கவிதை. தவறான அழகியலை உடைப்பதும், சரியான அழகியலை உருவாக்குவதும் ஒரு கவிஞனின் வேலை. அதைச் செய்து கொண்டும் இருக்கிறேன்”. எண்ணி ஒரு மணி நேரத்தில் சகல கவிஞர்களும் தம் பேச்சை முடித்துக் கொள்ள கவிஞர் மு.மேத்தா மட்டும் கிடுக்கிப் பிடி போட்டு ஒரு ஒண்ணரை மணி நேரத்திற்கு தம் வாதத்தை அரங்கிற்குள் வைத்து சலசலப்பை ஏற்படுத்தி விட்டார். அப்படியென்ன வாதம் என்கிறீர்களா? வேறொன்றுமில்லை. சிறந்த நாவலுக்கு அடுத்த ஆண்டு முதல் ‘சிற்பி விருது’ வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பை சிற்பி வெளியிட்டு விட்டார். மனிதருக்கு நாவல் மீது கோபமோ; நாவலாசிரியர் மீது கோபமோ (?!) எதுவுமேயில்லையாம். பிறகு?
”நானே ஒரு நாவலாசிரியன்தான். நாவலாசிரியர்கள் நிறையப் பேர் எனக்கு நண்பர்களும் கூட. ஆனால் சிற்பி அறக்கட்டளை நாவலாசிரியனுக்குப் பரிசு கொடுத்துத்தான் வாழ வேண்டுமா? எத்தனை மாத நாவல்கள்? பத்திரிகைத் தொடர்கதைகள், நூலகங்கள், வார இதழ்கள் எல்லாம் அவர்களுக்கு பட்டுப்பாய் விரித்து வெண்சாமரம் வீசிக் கொழுக்க வைக்கின்றன! போதாக் குறைக்கு சாகித்ய அகாதமி போன்ற பெரும் விருதுகள் கூட மிகப் பெரும்பாலும் கவிஞனைத் தீண்டத்தகாதவனாகவே நடத்திப் போகும் நிலையில் சிற்பி நாவலுக்குப் பரிசு தரலாமா? முறையா? அடுக்குமா? அப்படிப் பரிசு கொடுப்பதென்றால் இன்னொரு கவிதைத் தொகுப்புக்குக் கொடுங்கள். அல்லது இதே தேவனுக்குப் பரிசைக் கூட்டிக் கொடுத்து அவன் கம்பீரத்தை உயர்த்துங்கள். இல்லாவிட்டால் சிற்பி அவர்களே உறுதியாகச் சொல்லுகிறேன். நிச்சயமாகச் சொல்லுகிறேன். உங்கள் வீட்டின் முன் பெட்டி படுக்கையோடு வந்து உண்ணாவிரதம் இருப்பேன்.”
மனிதர் கடைசி வரை ‘மைக்’கைப் பிடித்த பிடி விடவில்லை. சிற்பி எழுந்து வந்து ‘நாவலுக்கு பரிசளிப்பு அறிவிப்பு வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் வரை மனிதர் அதுபற்றியே எக்கச் சக்கமாய்ப் பொரிந்து தள்ள இலக்கியக் கூட்டமே சலசலத்துப் போனது.
”மேத்தா சொல்வது நியாயம்தான். அதற்காக இப்படியா உடும்புப் பிடி பிடித்து மனிதர்களை சோதிப்பது?”
”மேடையிலேயே ஒரு பரிசை அறிவித்துவிட்டு, ஒரு தனி மனிதர் உரத்துக் கூச்சலிட்டார் என்பதற்காக அந்த அறிவிப்பையே வாபஸ் பெறுவது என்ன மரபு? என்ன கலாசாரம்? சிற்பி இப்படிச் செய்யலாமா?” - அப்போதே இப்படிப் பல குரல்கள் அங்கங்கே!-சாவித்திரி.நன்றி:
அம்பலம்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை- தேவதேவன்-அது தன் நாட்களைஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை.ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்றபுலன் துய்த்தலில் செலவிட்டதில்லை.பொருள், புகழ், அதிகாரங்கள் நோக்கியவேட்கை உந்தல்களை அது அறியாதது.
எப்போதாவது தன் துணையுடன்அன்றி எபபோதும் தன் தம்மையையேஅது பாதுகாத்தபடி அலைந்தது.
அதன் உயிர்ப்பும் சிறகடிப்பும்இயற்கையின் மர்மங்களனைத்தையும் உணர்ந்த வியப்பும்அதை விளக்கவியலாத படபடப்புமேயாம்.
ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்உதிர்ந்த மலர்போல அது கிடந்தது.
நல்லடக்கம் செய்யும் சுற்றமோ,மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ,சமூகமோ, தேசமோ இன்றிஅது அனாதையாய் மா¢த்திருந்தது.
நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்ஒரு கவிதைஇவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்மர்மமான இலட்சியம் ?
இன்று அது நிறைவேறியதையோ,எளிய உயிர்கள் நூறுகள் கூடிஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ,கண்களில்லாத கால்கள்அதை மிதித்தபடி செல்வதையோ,ஒரு பெருக்குமாறு அதைக் குப்பபைகளோடு குப்பையாய்ஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவதையோஎதைப்பற்றியும் கவலையுமில்லாமல்எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்ஈரமான என் தோட்ட நிலத்தில்செத்துக்கிடந்தது அது.
நன்றி : கனவு காலாண்டிதழ் (எண் 39/40) திருப்பூர்.
மௌனமாய் ஒரு சம்பவம்.
– தேவதேவன்.
கால்களை இடறிற்று ஒரு பறவை பிணம்.சுற்றிச் சூழ்ந்த விஷப்புகையாய் வானம்.கலவர முற்ற பறவைகளாய்திசையெங்கும் குழம்பி அலையும் காற்றுபீதியூட்டுகிறது மரங்களின் அசைவுமெல்ல நெருங்குகிறதுசலனமற்றிருந்த ஒரு பூதாகாரம்.
விரைத்து போய்ஆழ ஆழ மூழ்குகிறேன் நான்முழுக்க முழுக்க நீரால் நிறைந்தஎன் தலைமறைவுப் பிரதேசத்திற்குள்.
என் உள்ளங்கை முத்தாய் ஒளிரும் இது என்ன?வீணாகிப் போகாத என் இலட்சியமோ?என் துயர்களை ஆற்றத்தூதாய் வந்த வெறுங் கனவோ?
என்ன பொழுதிது?மீண்டும் எட்டிப் பார்கிறேன்:சலனம் கெட்டித்திருக்கும் இவ்வேளையுள்ளும்காலம் திகட்டாதுகல்லுக்குள் தேரையானஎன் உயிர் பாட்டின் வேதனை.என் நோய் தீரும் வகை எதுவோ?
இரத்தக் கறைபடிந்த சரித்திரமோ நான்?இயற்கை புறக்கணித்து வளர்ந்தஅதிமேதாவிக் கொழுந்தோ?அன்பால் ஈர்க்கப்பட்டுஇன்று இம் மலைப்பிரதேசம் வந்து நிற்கிறேன்.
முடிவுறாத காலச் சங்கிலிதன் கணத்த பெருமூச்சுடன்கண்ணுக்கு புலனாகாமல் நிற்கிறதோ,இப்பள்ளத்தாக்கின் மவுனத்திடம்ஒரு தற்கொலையை வேண்டி?
எதோ ஒன்றுயாருக்கும் தெரியாமல்மவுனமாய் நடந்து கொண்டிருக்கிறது.
” கல்லெறிபட்டும்கலங்காதுதேனையே சொரிகிறதுதேன்கூடு”
- தேவதேவன்
கடப்பாரைப்பாம்பு==============
சடாரென்று பதுங்கசெம்பருத்தி புதருக்குள் நுழையப்போவதுபோலபார்வையை அறைந்ததுகடப்பாரையா பாம்பா
தன் அருகிலே கிடந்ததை எடுத்துபாம்பை அடித்தவன்அந்தக் கருவியை கும்பிட்டுக் கொண்டாடியேதன் வாணாளாஇ கழிப்பானோ
கடப்பாரைதான் பாம்பாய் மாறிபுதருக்குள் ஒளிந்துகொள்ள விழைகிறதோபுதருக்குள்ளிருந்து வெளிப்பட்ட பாம்புதான்கடப்பாரையாய் மாறி தப்பிக்கிறதாகள்ளச்சிரிப்புடன் ?
வீதி==
விடிந்தும் விடியா பொழுதொன்றில்தெரியாமல் ஓர் அக்ரஹார தெருவழியாய்நுழைந்துவிட்டேன்
வெறுப்பும் பதற்றமும் பகைக்கோபமுமாய்துயரமும் பதற்றமும் பாசாங்குகளுமாய்கொதித்த முகங்கள் கண்டு துணுக்குற்றேன்என் தவறுக்கு நொந்து உந்தி எடுத்தேன்
ஆனால் அதில் பயனில்லைஇன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது அவ்வீதிமேலும் எல்லா வீதிகளிலும்அதற்கிணையானதும் அது தொடர்பானதுமானகொந்தளிப்பை உணர்ந்தேன்
தோணித்துடுப்போபெருமழையோகம்பீர நெடுங்கழி பெருக்குமாறோகுனிந்து குனிந்து கறைகள் துடைக்கும்துடைப்பானோதூரிகையோவாளோஎன்றெல்லாம்சித்தரிக்க சித்தரிக்கதீராத உன்னைகாதல்மிகு உறுதியுடன் கைப்பிடித்தேன்
தொனி=====
இன்றாவது அந்த மனிதனைப்பற்றிசிந்திக்க தொடங்கினோமேஅதற்காக நம்மைப் பாராட்டிக் கொள்வோம்
நலம் விசாரிக்கையில்இருக்கம்-யா என்றொலித்தஅவன் குரலை வாசிக்க மதியற்ற நாம்கவிதைகளின் தொனி குறித்துவிரிவாக ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தோம்
நாற்காலியில் அமர்ந்தபடியோவாகனத்தை ஒருநிமிடம் நிறுத்திஒரு கால் ஊன்றி நின்றபடியோஅல்லது அவன் குழந்தையோநாளையைப்பற்றிகேட்கப்படும்போதெல்லாம்பிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம் என்றான் அவன்
அய்யா என்ற இறைஞ்சல் பாதாளத்தில் இருந்துதோழர் என்ற பாதாளக்கரண்டியை பற்றியபடிஹலோ என்றவாறு அவனை சமீபிக்கையில்மலர்முகமும் நீட்டிய கையும்அற அத்ர்ச்சிக்குள்ளாகி பொசுங்கும்படிஅசிங்கமான ஓர் உஷார் நிலைக்கு வந்த அந்த மேலாள்குரூரமாக அவனை கவிடுகையில்அவன் என்ன ஆனான் ?அவன் உயிராசைவேகமன்றோபக்கச்சுவரில் உடல் சிராய்க்கதொற்றிக் கொண்டு தவிக்கிறது இன்று
சாதியம் நாறும் ஒரு த்தத்தின் மூலமா‘எல்லாரும் அமரர் நிலை எய்தும் நன்முறையை ‘இந்தியா உலகுக்கு அளிக்க போகிறது ?
எந்த தத்துவத்தில் இருந்து பெற்றதுஇன்றைய அவனது வலிமையும்இதய விரிவும் போராட்டமும் அறிவும்அச்சத்தால் பீடிக்கப்பட்டு அருவருப்பானஅந்த மேலாளுக்கும் சேர்த்தேவிடுதலை வேண்டி நிற்கும் அந்தபேராளுமை ?
கருணையற்ற மனித உலகுக்குகருணையின் பாதையைக் காட்டும் பேரருள் ?
[2004 தமிழினி வெளியீடாக வந்துள்ள தேவதேவனின் 'விடிந்தும் விடியா பொழுது ' என்ற நூலில் இருந்து ]
1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர்=======================
புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்வெளியில்சின்னஞ்சிறியதும்தன்னந்தனியனுமான ஓரு சுடராய்நான் நிற்கையில்ஒரு சிறு துடுப்போடுகடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்
மான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்ஊர்ந்தது ஒற்றையடிப்பாதையெனும் பாம்புஆ என்று துடித்து விழுந்த மான்புல்வெளியில் ஒரு வடுவாகியது
அங்கேபூமியில் கால் பரவாது நடக்கும்அந்த மனிதன் கையில்ஒரு மலரைப் பார்த்தேன்மண் விரல்களில் பூத்துகுருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .
2.மேகம் தவழும் வான்விழியே=====================
மேகம் தவழும் வான்விழியேஉன் தனிப்பெரும் வியக்தியைதுக்கம் தீண்டியதெங்கனம் ?
எதற்காக இந்தப் பார்வைவேறு எதற்காக இந்தச் சலனம் ?
அன்பான ஒரு வார்த்தைக்காகவா ?ஆறுதலான ஒரு ஸ்பரிசத்திற்காகவா ?மனம்குளிரும் ஒரு பாராட்டுக்காகவா ?
கவனிஉனக்கு கீழேஅவைஒரு நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன .
3. ஒளியின் முகம்==========
நான் என் கைவிளக்கைஏற்றிக் கொண்டதன் காரணம்என்னை சுற்றியுள்ளவற்றைநான் கண்டுகொள்வதற்காகவேஎன் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல
அல்லநீ என் முகத்தை கண்டுகொள்வதற்காகவும்தான்என்கிறது ஒளி
4. வரைபடங்கள்==========வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காணவரைபடம் எதற்கு ?வானமோஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது
5. அழைப்பு======
கடைசி மத்தாப்பும் உதிர்ந்துமரணம் என்னை சூழஉதிராத மத்தாப்புகள் கோடி ஏந்திவானம் என்னை அழைக்கிறது
6. தூரிகை======
வரைந்து முடித்தாயிற்றா ?
சரிஇனிதூரிகையைநன்றாக கழுவிவிடு
அதன் மிருதுவான தூவிகளுக்குசேதம் விளையாதபடிவெகு மென்மையாய்வருடிக் கழுவிவிடு
கவனம்கழுவப்படாத வர்ணங்கள்தூரிகையை கெடுத்துவிடும்
சுத்தமாய் கழுவியஉன் தூரிகையைஅதன் தீட்சண்யமான முனைபூமியில் புரண்டுபழுதுபட்டு விடாதபடிஎப்போதும் மேல் நோக்கியவெளியில் இருக்கஇப்படிப்போட்டுவைஒரு குவளையில்
7. அக்கரை இருள்============
நதி என்னை அழைத்தபோதுநதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்நடை விரிப்பாய் விரிந்திருந்ததுபாறையின்மேலிருந்தஎன் அறையின் விளக்கொளி
இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்என் நெஞ்சைச் சுண்டும் ஒரு குரல் கேட்டேன்முளைத்த துயரொன்றைகைநீட்டிப் போக்கிற்றுஇக்கரை நின்றிருந்த தோணி
என் பாத ஸ்பரிசம் கண்ட நதிஅக்கரைக்கும் ஓடி சேதி சொல்ல
நதியின் ஸ்பரிசத்தை ஆராதனையாய் ஏற்றவாறுதோணியை அடைந்தேன்நட்சத்திரங்கள் நிறைந்த நதியைஎன் துடுப்பு கலக்கவும் திடுக்குற்றேன்
அதுசமயம்நதிநோக்கி இறங்கிய படிக்கட்டுகளிலில்நடைவிரிப்பாய் விரிந்திருந்தஎன் அறையின் விளக்கொளிகூப்பிடுவது கேட்டது .
8. சூரியமறைவு பிரதேசம்=================
உனக்கு சந்தோஷம் தருவது எதுவோஅதுவே உனக்கு சூரியன்உதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்ஒரு பப்பாளிப்பழம்ஒரு ந்ண்பனின் முகம்ஒரு டம்ளர் தண்ணீர்இன்னும்காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்என சொல்லிக் கொண்டே போகலாம்
ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்ஒரு பப்பாளிப்பழம்அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையென்றால்ஒரு நண்பனின் முகம்உன் முகத்துக்கு ஒளியேற்றவில்லை என்றால்ஒரு டம்ளர்தண்ணீர்உன் தாகம் தணிக்கவில்லை என்றால்ஒரு கண்ணாடி முன்நீ புன்னகை கொள்ளா இயலவில்லை என்றால்காகிதத்தில் பொதிந்த கவிதைகளாய்உனக்கு உன் வாழ்க்கைகாணப்படாவிட்டால்உணர்ந்துகொள்‘நீ இருக்குமிடம் சூரிய மறைவு பிரதேசம் ‘
9] தன்னதனி நிலா==============தன்னந்தனி நிலாஎல்லாவற்றிலும் எதிரொளிக்கிறதுஅதன் அழகு
தன்னதனி நிலாதன் அழகை தானே ரசிக்கிறதுநீர் நிலைகளில்
தன்னந்தனி நிலாதன் தனிமை மறக்கிறதுநீர் நிறை கண்களில்
10. மலை====
மலை உருகி பெருக்கெடுத்த நதிமடியுமோ நிரந்தரமாய் ?
அவ்வளவு பெரிய கனலைவெளிப்படுத்த வல்லதோஒரு சிறு சொல் ?
1] பக்த கோடிகள்———————
பக்த கோடிகள் புடைசூழகால்மேல் கால்போட்டுகடவுள் நான் என்றுடிக் டிக்கிறதுமுக்காலிமேல் ஒரு கடிகாரம்
பக்தகோடிகளுக்குஓவர் டைமும் உபரிவருமானமும்உயர்குடி வாழ்வும்அருளுகிறார் கடவுள்
கடவுள் மரிப்பதில்லைரிப்பேர்தான் ஆவதுண்டு என்கிறது வேதம்கடவுள் பழுதானால்காலநோய்கள் பெருத்துவிடுமாகையால்கடவுள் பழுது நீங்கநிரந்தர மடங்களும் ம்டாதிபதிகளும்அவ்வபோது தோன்றும் மகான்களும்காலநோய் தீர்க்க கல்விமான்களும்சதா கடவுள் நாமம் மறவாது பாடிக்கொண்டிருக்கபக்த கோடி மகாஜனங்களும் உண்டே
இந்தக் கூட்டத்தில் போய்கவிஞனை தேடுவதென்ன மடமைஅதோபார் உழைத்து ஓடாகிமரணம் பார்த்து நின்றுகொண்டிருக்கும்ஒரு மாட்டின்மேல்மெளன அஞ்சலி செய்துகொண்டிருக்கிறதுஒரு காகம்நித்யத்துவத்தை நோக்கி அதன் முகம்
2]கடவுளே————-
ஒரு புதுக்காற்று ஒன்றுஅறைக்குள் சுழன்றடித்திருக்கிறது
ஊதுபத்தி பூமாலைகள் திகைக்கதன் முதுகின் வெட்டவெளியை காட்டியபடிதிரும்பியிருக்கிறார் காலண்டர் தாளிலுள்ள கடவுள்
கோபமாசுய மறுப்பா ?காட்டும் புதிய தரிசனமா ?
வரண்டு இருண்டு விறைத்த முகம் ஒன்றுவந்தது நான்கு ஆணிகள்மற்றும் சுற்றியலுடன்
3] ஒரு பரிசோதனையும் கவலையும்———————————————-
கவனத்தை ஈர்க்கும் ஒரே நோக்குடன்குறுக்கும் மறுக்குமாய் அலைந்துகொண்டிருந்தனர்தேவதைகள்
பூமியை பரிசோதிக்க மனம்கொண்ட கடவுள்ஒரு மழையை பெய்துவிட்டுபின்னாலேயே தேவதைகளை அனுப்பிவைத்தார்
தட்டான்களின் வாலில் கல்லைக்கட்டியும்நீண்ட நூல்களை கட்டியும் கல்சுமக்க வைத்தும்சிறகுகளை துண்டித்து பறக்கவிட்டும்இரண்டு தட்டான்களை ஒரு நூலால் இணைத்தும்அவை திண்டாடுவதை ரசித்துக் கொண்டிருந்தனர்மனிதக்குழந்தைகள்
கடவுளும் தேவதைகளின் தலைவனும்ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்ஆழ்ந்தகவலையுடன்
3] உருமாற்றம்————-
அந்த அறையில் மூவர் குடியிருந்தனர்
காட்சி -1
சாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன்தியானத்தில் அமர்ந்திருந்தார் புத்தர்முழுநிர்வாணத்தை நோக்கிஅரை நிர்வாணத்துடன்ராட்டை சுற்றிக் கொண்டிருந்தார் காந்திரத்தம் சொட்ட தன்னைத்தானேசிலுவையில் அறைந்து கொண்டிருந்தான்மரிக்கவும் உயிர்த்தெழவும் அறிந்த மேதை
வெளியே இருந்து ஓர் ஓலக்குரல்உள்ளே புகுந்ததுஅரைக்கணம் தாமதித்திருக்குமா ?புகுந்த வேகத்தில் வெளியே ஓடிற்றுஆனால் அந்த அரைக்கணத்தில்அக்குரல் உருமாறியிருந்ததுசாந்தியும் துக்கமும் நிறைந்த ஒரு குரலாய்
காட்சி 2
நான் உள்ளே புகுந்தபோதுஒரு காபி கிடையாதா என்றார் புத்தர்தனது இதயத்தை ஒரு யாசகக் குவளையாய்குலுக்கினார் யேசுபட்டினிக்குழந்தைகளுடன்கைவிடப்பட்ட பெண்ணின்சீரழிந்த புன்னகையைப்போலஒரு புன்னகையை வீசிவிட்டுராட்டை சுற்றினார் காந்தி
அதீத துக்கத்தால் என் இதயம் வலித்து எழுந்த குரல்வேகமாய் குதித்தது ஜன்னல் வழியே வெளியேவெளியே குதித்த குரல் வீதியெல்லாம் அலைந்துநாற்றமடிக்கும் ஓர் அவலக்குரலாய் மாறியது
4] இந்தத் தொழில்————————–
கபடமற்றதோர் அன்புடனும்அற்புதமானதோர் உடன்படிக்கையோடும்கடவுளும் சாத்தானும்கைகுலுக்கிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்.கடவுள் முதல்போடசாத்தான் தொழில் செய்யகடவுள் கல்லாவில் இருக்கசாத்தான் வினியோகத்திலிருக்கஅற்புதம் ஒன்றுகண்டேன்கவிதை எழுதிக் கொண்டிருக்கையில்
அங்கேஎன் சிந்தனை ஒன்றைக் கொடுத்துபடிமம் ஒன்று வாங்கிக் கொண்டிருந்தேனா ?அல்லதுபடிமம் ஒன்றைக் கொடுத்துசிந்தனை ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தேனா ?
சேச்சே என்ன கேள்விகள் இவை ?கடவுளும் சாத்தானும் கைகோத்த கோலத்தைகண்டதற்கு சாட்சியாய் பாடும் என் இதயம்அக்கறை கொள்ளாது இந்த தொழில்மீது.
5 ] மாண்புமிகு கடவுளைப்பற்றிய ஒரு கட்டுக்கதை—————————————————————
கடவுளையும் அனுமதிககதபடிஅந்த அறையை சுதந்தரித்திருந்தார்கள் அவனும் அவளும்ஆனால் செளகரியமான ஒரு சூக்கும உருவுடன்கடவுள் இருந்தார் அங்கே ஒரு படைப்பாளியின் ஆசையுடன்
ஒரு பெரும் கச்சடாவாக இருந்தது அவர்கள் பாஷைஅவருக்கு அது புரியவில்லை முழித்தார்என்றாலும் மேதமை மிக்கவரானதனால்அந்த நாடகத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொண்டார்
அவர்கள் ஆடைகளை களைந்தபோதுதான்அவர் கண்களில் ஒளிர்ந்தது ஒரு தெளிவுஆனால் அவர்கள் விழிகளில் நின்றெரிந்ததுஓயாத ஒரு புதிர்அப்புறம் அவர்களைதழுவியது ஒரு வியப்புதத்தம் விழிகள் விரல்கள் இதழ்கள் மற்றும் சதையின்ஒவ்வொரு மயிர்க்கால்களைக் கொண்டும்துதியும் வியப்பும் பாராட்டும் சீராட்டும் பெற்றதுகடவுளின் படைப்பு
சந்தோஷமும் வெட்கமும் கிள்ளமுகம் திருப்பிக் கொண்டார் படைப்பாளிஅளவற்ற உற்சாகத்துடன் அங்கிருந்து கிளம்பிதன் பட்டறைக்குள் நுழைந்தவர் திடுக்கிட்டார்அங்கே அவரில்லாமலேதானே இயங்கிக் கொண்டிருந்தது படைப்புத்தொழில்
அன்றுமுதல் கடவுளைக் காணோம்
இதுவேபுதிரான முறையில்இப்பூமியை விட்டே காணாமல் போனகடவுளைப் பற்றிய கதை
6 ] விதிகள்——————-
மகளை ஒரு முழு உருவப் புகைப்படமாக மாற்றிபைக்குள் வைத்துக் கொண்டு மாப்பிள்ளைதேடும் தந்தைபழையபடி அப்புகைப்படத்தைஒரு பெண்ணாக மாற்றவல்ல மந்திரவாதி ஆவார்.
உற்றத்திலும் சுற்றத்திலும்ஒரு இதயத்தைக்கூட சந்தித்தறியாத ரசிகன்அவன் தன் கலைஞனைக் கண்டவுடன்உயிர்பெருகி சாவான்
வண்ண விகாரங்களும் கர்ண கொடூரங்களூமானவாழ்க்கையைவெற்று திரைச்சீலையையும் ஒற்றை வண்ணமும் கொண்டுஎதிர்கொள்ளும் கலைஞன்உதிரச்சாயம் உள்ளவரையே அவன் வாழ்க்கை
எளியவன் நான் நன்றாகவே அறிவேன்வரிசையாக நிறுத்தி வைத்தான் நானே கடைசி மனிதன்முதல்வனை கடவுளை அல்லது மகாத்மாவைநான் நனறாகவே அறிவேன்அவரை அடுத்துநிற்கும் பேற்றை நான் பெற்றுள்ளதால்!எவ்வாறெனில்பூமி ஒரு கோளம் அதில்ஒவ்வொரு உண்மையும் ஒரு வட்டம்
இடத்தை அடைக்கும் பொருட்கள் மேலெல்லாம்தூசியாய் படியும் பரம்பொருள் அது !அதுமட்டுமென்னவிதிகளுக்குள் அடங்காதுஎல்லாவற்றுக்கும் விதிகளை இயற்றிக் கொண்டிருக்கிறது .
7 ] வெற்றுக்குவளை—————————
வெற்றுக்குவளையை தந்து சென்றவன்வந்து பரிமாறுவதற்குள்என் ஆசைகளால் நிறைத்து விட்டேன் அதனை.துக்கத்தால் நிறைந்துவிட்டது வாழ்க்கைகாணுமிடமெங்கும் மெளனமாய் நிறைந்திருந்ததுஎன் குவளையில் பரிமாறப்படாத பொருள்.என் ஆசைகள் பருகி முடிக்கப்பட்டுகாலியாகி நின்ற குவளையில் பரிமாறப்பட்டுததும்பியது அது.வெற்றுக்குவளையை தந்து சென்றவன்வந்து பரிமாறியது அதுஇப்போது நான் பருகிக் கொண்டிருப்பது .பருகி முடித்ததும்மீண்டும் பரிமாற வந்தவன் முகத்தில்என் முகத்தில் தன் மரணத்தைகண்டதன் கலக்கம்
***
8 ] பலி—-
யார் உண்டாக்கிக் கொண்டிருப்பதுநூறு நூறு மின்னல்களால் அறியப்படும்இவ்வாளின் சுழற்சியை ?எவருடைய சிந்தனைகள் இவை ?அன்றைய காலை சூரியனின்முகத்தில் ஓர் ஏளனப்புன்னகை
9]இறையியல்—————–
‘ஆண்டவர் முதலில் ஆதாமையும்அப்புறம் அவனுக்கு துணையாக ஏவாளையும்.. ‘என்பது ஓர் ஆணாதிக்கப்பொய்ஆண்கடவுள் ஆதாமையும்பெண்கடவுள் ஏவாளையும் படைத்தனர்
தத்தமது ஏகாந்தநிலை சலிப்புற்றுஆதாமும் ஏவாளும் காதலிக்கத் தொடங்கியமண்ணின் அழகுகண்டு உண்டான தாபம் உந்தஆண்கடவுளும் பெண்கடவுளும் காதலிக்கத்தொடங்கினர்
கடவுளர்கள் ஒரு குழந்தையை கருவுறுவதற்கு முன்ஓராயிரம் கோடி மக்களை பெற்றிவிட்டனர் ஆதி தம்பதியினர்
துன்பச் சூழலில் இருந்து விடுபட ஆதாமும் ஏவாளும்தத்தமது கடவுளை நோக்கி திரும்பியபோதுஆட்சிபீடத்தை சாத்தானுக்கு விட்டுவிட்டகடவுள் தம்பதியினர்கலவியிலிருந்தே இன்னும் விடுபடவில்லை
மீட்சிக்கு இனி எங்கேபோவது ?ஆதாமும் ஏவாளும்தங்கள் காதலுக்கு முன்னாலுள்ள ஏகாந்தவானிலிருக்க கூடும் தங்கள் கடவுளர்களின்சொற்களை தேடிக் கொண்டிருந்தனர்.
வானத்திலிருந்து சொற்கள்பறவைகளை ஏந்திக் கொண்டதை கண்டனர்மேகங்களை உருவாக்கிமழையை பொழிந்ததைக் கண்டனர்உயிர்காக்கும் உணவாகி தங்கள் இரத்தத்தில்காலங்காலமாய் துடித்துக் கொண்டிருப்பதையும்இன்னும்…. அவர்கள் முடிவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்வானத்துச் சொற்களின் முடிவற்ற வேலைகளை
10] பட்டறை————-
என்னை அழைத்துவந்துஎன் பெயரை ஏன் கேட்கிறாய் ?என்னை நீ அழைப்பதற்குஎன் பெயர் உனக்கு தேவைப்படவில்லையே ?எனக்கு நீ இட்ட பணிஎதுவென நான் அறிவேன்எனக்குள் வலிக்கிறதுஎதனாலென நான் அறியேன்நெருப்பில் பழுத்தஇரும்புத்துண்டம்போலஎன் நெஞ்சே எனக்குத்துயர் தரும் சேதிகேட்டுதோள்குலுக்கி ஊர் சிரிக்கஒப்புகிறதா உன் உள்ளம் ?எந்த ஒரு பூவும் மலரவில்லைஇப்போதெல்லாம் என் வதனத்திலிருந்துமந்திரக்கனி எதுவும் தோன்றவில்லைஓர் உள்ளங்கைக்கு நான் பரிமாற .உன் பிரசன்னம் என்னை சுட்டுருக்குகிறதுஉன் சம்மட்டி அடி என் தலைமீது.அம்ருதக்கடலில் இருந்துஅலை ஓசை கேட்கிறது .அக்கினிக்கடலில் இருந்துஅலறும் குரல்களும் கேட்கின்றன.உன் கம்பீரப்பதில் குரலாய்என் தலைமீது ஒலிக்கிறதுஉன் சம்மட்டி அறை ஓசை.காலிக்குடமாகவாதங்கத்தோணியாகவாஓர் கூர்வாளாகவாஎன்னவாக்கிக் கொண்டிருக்கிறாய்என்னை நீ ?ஒன்றும் புரியவில்லை.உணர்வதெல்லாம்குறைகூற முடியாதஓர் வேதனையை மட்டுமே.
1 ] பனைகள்
பனைகளின் தலைகளெங்கும்
பறவைகளின் சிறகுகள்
பச்சைப்பனைகளின் நடுவே
ஒரு மொட்டைப் பனை
மொட்டைப்பனை உச்சியிலே
ஓர் பச்சைக்கிளி
அடங்கிவிட்டது
‘மரணத்தை வெல்வோம் ‘ என்ற கூச்சல்
மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது
இனி இங்கே நான்
செய்யவேண்டியதுதான் என்ன ?
‘நானே தடைகல் ‘ஆகும்வழியறிந்து
வழிவிடுவதை தவிர ?
பனைகளின் தலைகளெங்கும்
படபடக்கும் சிறகுகள்
பாவம் அவை பூமியில்
மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.
2] ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை
ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே
ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்
3] பறவைகள் காய்த்த மரம்
ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா ?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்
ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய் காய்த்து
இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது
ஒரு நண்பனைப் போல
சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ
மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்
4] தனிமரம்
ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்
தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை
அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்
5] பனை
விடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ
எதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் ?
அனைத்தையும் ஊருருவிய பின்னே
ஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்
அதை சிரமேற்கொண்டு கனிந்தனையோ ?
ஒற்றைகாலில் நின்றபடி
உன் தவத்தின் வைரத்தை
என் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் ?
அன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்
வீற்றிருந்தது அது
பின்பு
இரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து
வெளியேறியது அது
கோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்
எதிர்ப்பேதும் காட்டாது விழுந்து
நீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்
நின்றிருந்தது அது .
6] நச்சுமரக்காடு
ஒரு மரம்
அதன் ஆணிவேர் நான்
அதன் பக்கவேர்கள்
என் மதம் என் ஜாதி என் இனம்
என் நாடு என் கொள்கை என் மரபு
இன்னும் நூறு நூறு சிம்புவேர்களை
நான் சொல்ல வேண்டுமா ?
அச்சம்தரும் வலிமையுடன்
அடிமரம்.
ஆயிரமாயிரமாண்டு எனினும்
மனித குலம் அளவுக்கு இளமை
அதன் இருப்பிற்கும் எதிர்காலத்துக்குமான
உத்த்ரவாதப் பசுமை தழைக்கும்
அதன் கிளைகள்
எந்த புகைப்படத்திலும்
எந்த வரைபடத்திலும்
அடங்க ஆயாசம் கொள்ளும் பின்னல்
எங்கும் காய்த்து குலுங்குகின்றன
தோட்டாக்கள் வெடிகுண்டுகள் அணுஆயுதங்கள்
7] பூக்கும் மரங்களின் ரகசியம்
நீரை நாடும் தேடலே
வேர்கள்
சூழலை எதிர்கொள்ளும் மெளனமே
அடிமரம்
ஒளியை நாடும் விழைவே
கிளைகள்
உதிரும் இலைகளின் பிரிவே
மரணம்
பிறப்பின் புதுமை பசுமையே
தளிர்கள்
அறிந்தேன்: பூக்கும் மரங்களின்
ரகசியம்.
8] புயலில்
புயலில் சரிந்த ஒரு மரத்தைநிமிர்த்தி நிற்க வைத்துவிட்டேன்ஒரு நூறு குழந்தைக் கைகளின் உதவியுடன்.நான் சொன்னேன் குழந்தைகளிடம்‘ ‘இவ்வாறே நாம் இந்த உலகை காப்பாற்றப்போகிறோம் ‘எல்லாம் வெகு சுலபம்புயலில்தன் வாழ்வுக்காய் அன்றிதன் உயிருக்க்கு மேலாய் நேசித்த ஒன்றைவெகு தீவிரத்துடன் சொல்ல முயன்றுகொண்டிருந்தது மரம்சொல்ல முடியாத வேதனையே அதன் சலனம் .மாசு இல்லா பாதம் போன்ற வேர்கள் தெரியவீழ்ந்து கிடந்தது மரம்தான் நேசித்ததும் சொல்ல விரும்பியதுமானஓரு பேருண்மை முன்வீழ்ந்து வணங்கியபடி அமைதியாகிவிட்டதா அது ?பரபரப்பான சாலை ஒன்றின் குறுகே விழுந்துஅது குறிப்பால் உணர்த்தும் பொருள் என்ன ?சுறுசுறுப்பு மிக்க நம் மக்கள் ஆகாசற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாகஇடைஞ்சலில்லாத போக்குவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள்அகோரமாய் கைகால்கள் வெட்டப்பட்டுசாலையோரமாய் இழுத்து இழுத்துவீசப்பட்டிருந்தது.அணைக்கட்டுகளை உடைத்து மதகுகளை உடைத்துகரைகளை உடைத்துபடைப்பின் ஆற்றையும் விழுங்கிவிட்டதுபேராசையின் வெள்ளம்இயந்திர உலகின் நுரையீரல்களில் இருந்து கிளம்பியது புயல்விருட்சங்களும் ஒளிக்கம்பங்களும் சரிந்து விழுந்துஇருண்ட ராத்திரி .முழு மரத்திலிருந்துமுறிந்து விழுந்த கிளையினைப்போலநானும் என் குழந்தையும்
9] இலையசைவு
விருப்பமோ தீர்மானமோ இன்றிஇலையில் தங்கியிருந்த நீர்சொட்டு சொட்டாக விழுந்துகொண்டிருந்ததுஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை‘அப்பாடா ‘ என மேலெழுந்தது இலைஅது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்தேவையான ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டுஆமோதிப்போ மறுதலிப்போ அல்லாதஒரு தலையசைப்பை மட்டும் செய்வதாய்அசைந்து கொண்டிருந்தது இங்கும் அங்குமாகஒரு நீண்டகிளையின் சிறு உறுப்புதான் என ஒரு கணமும்முழுமுதல் என மறு கணமும்இங்கும் அங்குமாய் அல்லாதுவேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்என்றும் இருக்கிறதை மட்டும் அறிந்திருந்தது அது .
1. வீடும் வீடும்========
பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள்பாதுகாப்புடன் இருக்கிறேன்
என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடுஒருகாலத்தில்என்னை ஓய்வு கொள்ள விடாதுவாட்டி எடுத்த ஓட்டைக் குடிசையிலும்குளிருக்குப் பற்றாதஅம்மாவின் நைந்தநூல்சேலையிலும்உருக் கொண்டது
எப்போதும் நம் லட்சியமாக இருக்கும்இவ்வுலகம் பற்றிய கனவுநம்மில் ஒருக்காலும் இதுபோலகருக்கொண்டதில்லை என்பதை நான் அறிவேன்
மலரோடு தன் வேலை முடிந்ததும்விலகி வெளி உலாவும் கருவண்டைப்போலநாம் ஒருக்காலும்இருந்ததில்லை என்பதையும் .
******
2. வீடுகள்=======
வீதிவலைக் கண்ணிகளோஇந்த வீடுகள் ?
கல்முகங்கள் சில வீடுகளுக்குசினேகத்தை பின் ஒதுக்கிநாய்க்குரலில் வரவேற்கின்றன அவைவீதியில் நடந்து செல்லும் மனிதனைசந்தேகத்தோடும் அச்சத்தோடும்நோக்குபவை
வீதியில் நடந்து செல்லும்ஒவ்வொரு முகத்திலும் தன் அன்பனைத் தேடும்எளிய வீடுகளும் உண்டு
யாத்ரீகனோ தன் வீட்டைஎப்போதும் தன் தோள்மேலே வைத்திருக்கிறான்
மலயுச்சி மீதிருக்கையிலோபறவைப்பார்வையில் பிடிக்கப்பட்டபுகைப்படமொன்றிலோஇந்த வீடுகள் எல்லாம் கல்லறைகளாய்த்தோன்றுகின்றன
சிலவேளை எதை நோக்கியும் பயணம் செய்யாததும்தம் குறிக்கோளை அடைந்ததுமானசாஸ்வதப் பேரமைதியில் மிதக்கும்படகுகள் போலவும் தோன்றுகின்றன
******
3. இரண்டுவீடுகள்===========
மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது
ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்துஅவன் கற்றுக்கொள்ளவேண்டும்.
மற்றொன்றைசிட்டுக்குருவியிடமிருந்து.
*****
4. அந்த இசை==========
மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்ஒவ்வொரு பொருளையும் தொட்டுஅதனதன் இடத்தில் வைத்தேன்தூரெடுக்கப்பட்ட கிணறு போலாயிற்று அறை
புனித நீரில் குளித்துவியர்வை நாற்றமில்லா ஆடை அணிந்துமாலை உலா கிளம்பியபோதுகேட்கத்தொடங்கிய அந்த இசைநீடிக்கவில்லை
வழிப்பறிக்கு ஆளானவன் போல திரும்பினேன்விடியும்வரைஇரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்
*****
5. மொட்டைமாடிக்களம்===================
நான் கட்டினேன் ஒரு வீட்டைவீடு தனக்குத்தானே கட்டிக் கொண்டதுவானம் வந்து இறங்க விரித்ததன் மொட்டைமாடிக்களத்தை
*****
6.குருவிக்கூடு===========
நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாகமொட்டைமாடியை தந்தது வீடு
இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்துதன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்ஒரு குருவிக்கூடாய்அசைந்தது நான் அமர்ந்திருந்தஅந்த மொட்டைமாடி
*****
7. மரத்தின் வடிவம்==============
சிவந்த பூக்களுடன்ஜன்னலை உரசும் மரக்கிளைஉன் முத்தம்
கூரைமீதுகுனிந்துஉச்சிமுகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம்
வாயிலை நோக்கி தாழ்ந்தகிளை அசைவு உன் அழைப்பு
இமையாத விழிப்புடன்இடம் பெயராஅத இருப்புநிலையில்காணுகிறது உன் நித்தியத்துவம்
உன் ஒருபகுதியை வெட்டி வீழ்த்தியேஅக்கூரைமீதுஒரு மாடிக்கட்டிடத்தை எழுப்பிமுன்னேறினேன்வெட்டப்பட்டுஇரத்தம் கொட்டும்உன் மொட்டைவிரல்மாடிக்கட்டிடத்தை சுட்டியபடி
திடுக்கிட்டுஇனி நான் என்ன செய்வதுஎன துடித்துக் மொண்டிருக்கையில்அம்மொட்டை விரலை சுற்றிலும்வீரிட்டு முளைத்திருந்தனபுதுத்தளிர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக