23 ஏப்ரல், 2009

ஏ கடலே
- Kavi Perarasu Vairamuthu
ஏ கடலே!உன் கரையில் இதுவரையில்கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகின்றோம்ஏ கடலேநீ முத்துக்களின் பள்ளத்தாக்காமுதுமக்கள் தாழியா?
நீ கலங்களின் மைதானமா?பிணங்களின் மயானமா?
துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டுநீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?
உன் அலைஎத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?
நீ தேவதை இல்லையாபழிவாங்கும் பிசாசா?
உன் மீன்களை நாங்கள் கூறுகட்டியதற்காஎங்கள் பிணங்களை நீகூறுகட்டுகிறாய்?
நீ அனுப்பியதுசுனாமி அல்லபிரளயத்தின் பினாமி
பேய்ப்பசி உன்பசிபெரும்பசி
குமரிக்கண்டம் கொண்டாய்கபாடபுரம் தின்றாய்பூம்புகார் உண்டாய்
போதாதென்றுஉன் டினோசார் அலைகளை அனுப்பிஎங்கள் பிஞ்சுக்குழந்தைகளின்பிள்ளைக்கறி கேட்கிறாய்
அடக்கம் செய்ய ஆளிராதென்றாபுதை மணலுக்குள்புதைத்துவிட்டே போய்விட்டாய்?
என்னபிழை செய்தோம்?ஏன் எம்மைப் பலிகொண்டாய்?
சுமத்ராவை வென்றான்சோழமன்னன் ராஜராஜன்
அந்தப் பழிதீர்க்கவாசுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்சோழநாடு கொண்டாய்?
காணும் கரைதோறும்கட்டுமரங்கள் காணோம்குழவிகளும் காணோம்கிழவிகளும் காணோம்தேசப்படத்தில் சில கிராமங்கள் காணோம்
பிணங்களை அடையாளம்காட்டப்பெற்றவளைத் தேடினோம்அவள்பிணத்தையே காணோம்
மரணத்தின் மீதேமரியாதை போய்விட்டதுபறவைகள்மொத்தமாய் வந்தால் அழகுமரணம்தனியே வந்தால் அழகுமொத்தமாய் வரும் மரணத்தின் மீதுசுத்தமாய் மரியாதையில்லை
அழுதது போதும்எழுவோம்அந்தமொத்தப் பிணக்குழியில்நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்
இயற்கையின் சவாலில்அழிவுண்டால் விலங்கு
இயற்கையின் சவாலைஎதிர்கொண்டால் மனிதன்
நாம் மனிதர்கள்எதிர்கோள்வோம்
மீண்டும் கடலேமீன்பிடிக்க வருவோம்
ஆனால்உனக்குள் அஸ்திகரைக்கஒருபோதும் வரமாட்டோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக