6 ஏப்ரல், 2009

போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடைமனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்இரண்டும் தரித்தவளே!
காதல் தானடிஎன்மீதுனக்கு?
பிறகேன்வல்லரசின்ராணுவ ரகசியம்போல்வெளியிட மறுத்தாய்?
தூக்குக்கைதியின்கடைசி ஆசைபோல்பிரியும்போது ஏன்பிரியம் உரைத்தாய்?
நஞ்சு வைத்திருக்கும்சாகாத நாகம்போல்இத்தனை காதல் வைத்துஎப்படி உயிர் தரித்தாய்?
இப்போதும் கூடநீயாய்ச் சொல்லவில்லைநானாய்க் கண்டறிந்தேன்
இமைகளின் தாழ்வில் -உடைகளின் தளர்வில் -
என்னோடு பேசமட்டும்குயிலாகும் உன்குரலில் -
வாக்கியம் உட்காரும்நீளத்தில் -வார்த்தைகளுக்குள் விட்டஇடைவெளியில் -
சிருங்காரம் சுட்டபெருமூச்சில்
வறண்ட உதட்டின்வரிப்பள்ளங்களில் -
நானாய்த்தான் கண்டறிந்தேன்காதல் மசக்கையில்கசங்கும் உன் இதயத்தை.
சேமித்த கற்புசிந்தியா போயிருக்கும்?
நீயாக கேட்டிருந்தால்நெஞ்சு மலர்ந்திருப்பேன்
உண்டென்றால்உண்டென்பேன்இல்லையென்றால்இல்லையென்பேன்
இப்போதும் கூடதேசத்துரோகமென்பதைஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி
உள்ளாடும் காதலைஒளிக்கவே பார்க்கிறாய்
காதலில்தயக்கம் தண்டனைக்குரியதுவினாடி கூடவிரயமாதல் கூடாது
காலப் பெருங்கடலில்நழுவி விழும் கணங்களைமீண்டும் சேகரிக்கஒண்ணுமா உன்னால்
இந்தியப் பெண்ணே!இதுவுன்பலவீனமான பலமா?பலமான பலவீனமா?
என்வாத்தியக்கூடம்வரைவந்தவளே
உன் விரல்கள்என் வீணைதடவ வந்தனவா?
இல்லைபுல்லாங்குழல் துளைகளைப்பொத்திப்போக வந்தனவா?
என் நந்தவனத்தைக்கிழித்துக்கொண்டோடிச்சட்டென்று வற்றிவிட்ட நதி நீ
உன் காதலறிந்த கணத்தில்என் பூமி பூக்களால் குலுங்கியது
நீ வணங்கிப் பிரிந்தவேளைஎன் இரவு நடுங்கியது
பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானேகாதலையே அறிவித்தாய்
இருபதா? முப்பதா?எத்தனை நிமிடம்?என் மார்பு தோய்ந்து நீஅழுததும் தொழுததும்
என் பாதியில்நீ நிறையவும்உன் பாதியில்நான் நிறையவும்வினாடித்துகள் ஒன்றுபோதுமே சிநேகிதி
நேரம் தூரம் என்றதத்துவம் தகர்த்தோம்
நிமிஷத்தின் புட்டிகளில்யுகங்களை அடைத்தோம்
ஆலிங்கனத்தில்அசைவற்றோம்
உணர்ச்சி பழையதுஉற்றது புதியது
இப்போதுகுவிந்த உதடுகள்குவிந்தபடிமுத்தமிட நீயில்லை
தழுவிய கைகள்தழுவியபடிசாய்ந்து கொள்ள நீயில்லை
என் மார்புக்கு வெளியேஆடும் என் இதயம்என் பொத்தானில் சுற்றியஉன் ஒற்றை முடியில்
உன் ஞாபக வெள்ளம்தேங்கி நிற்குதுமுட்டி அழுத்தி நீமுகம்பதித்த பள்ளத்தில்
தோட்டத்துப் பூவிலெல்லாம்நீ விட்டுப்போன வாசம்
புல்லோடு பனித்துளிகள்நீவந்துபோன அடையாளமாய்க்கொட்டிக் கிடக்கும்கொலுசுமணிகள்
நம் கார்காலம்தூறலோடு தொடங்கியதுவானவில்லோடு நின்றுவிட்டது
உன் வரவால்என் உயிரில் கொஞ்சம்செலவழிந்து விட்டது
இந்த உறவின் மிச்சம்சொல்லக்கூடாதசில நினைவுகளும்
சொல்லக்கூடியஒரு கவிதையும்.
- வைரமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக